குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால்… 300 யூனிட் வரை இலவச மின்சாரம்.. சிலிண்டர் ரூ.500-க்கு விற்பனை – ராகுல் காந்தி

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், விவசாயிகளின் ரூ.3 லட்சம் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி. 

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற்னர்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் ரூ.3 லட்சம் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சமையல் காஸ் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு 300 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், மாநிலத்தில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 3,000 ஆங்கில வழி பள்ளிகள் தொடங்கப்படும். மாணவிகளுக்கு இலவசமாக கல்வி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் பெரும் தொழிலதிபர்களின் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். அவர்கள் ஒருபோதும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment