கர்ப்பிணி பெண்ணை பாதியில் இறக்கிவிட்டு சென்ற ஆம்புலன்ஸ்!! வைரலாகும் வீடியோ

₹1,000 செலுத்தத் தவறியதால் கர்ப்பிணிப் பெண்ணை உத்திர பிரதேச சாலையில் விட்டுச் சென்ற ஆம்புலன்ஸ். 

உத்திரபிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் குடும்பத்தினரிடம் ஆம்புலன்ஸிற்கு பணம் செலுத்த போதிய பணம் இல்லாததால் ஆம்புலன்ஸ் டிரைவர் கர்ப்பிணிப் பெண்ணை சாலையில் விட்டுச் சென்ற சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், கர்ப்பிணிப் பெண் சாலையில் அமர்ந்திருப்பதைக் காணலாம், அவரது குடும்பத்தினர் அவருக்கு உதவ முயற்சிக்கிறார்கள். மேலும் அந்த ஆம்புலன்ஸ் விட்டு செலாவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

குடும்பத்தினர் ₹1,000 செலுத்தத் தவறியதால் ஆம்புலன்ஸ் டிரைவர் அவளை சாலையில் விட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

author avatar
Varathalakshmi

Leave a Comment