உண்மைத் தன்மையினை விளக்கும் சுற்றுப் பயணத்தை விரைவில் தொடங்குவேன் – ஓபிஎஸ்

உண்மை தன்மையை விளக்கும் சுற்றுப்பயணத்தை விரைவில் தொடங்கும் உள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் தொடர்ந்து குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஓபிஎஸ் மதுரையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், பெரியகுளம் திரும்பும் முன் மதுரை கோச்சடை பகுதியில் உள்ள திருமண மஹாலில் தனது ஆதரவாளர்களுடன் தேனீர் அருந்தியவாறு அரசு நடத்தினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் உண்மை தன்மையை விளக்கும் சுற்றுப்பயணத்தை விரைவில் தொடங்கும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment