ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான செய்தியறிந்து வேதனையடைந்தேன்-பசவராஜ் பொம்மை..!

பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன் எனகர்நாடக முதலமைச்சர் தெரிவித்தார். 

சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிஹாப்டர் வெலிங்கடனுக்கு சென்ற போது மோசமான வானிலை(மேகமூட்டம்) காரணமாக காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதியாக பிபின் ராவத் , அவரது மனைவி உட்பட 14 பேர் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும், அதில் பயணம் செய்தவர்களின் முழுமையான விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதுவரை இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய  கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை,  முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன் என தெரிவித்தார்.

author avatar
murugan