மாநிலங்களவை தேர்தலில் எனக்கு வாய்ப்பு வழங்கிய ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன்-வைகோ

திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மாநிலங்களவை தேர்தலில் மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவார் என உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் வைகோ.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் வைகோ.அப்பொழுது அவர் கூறுகையில்,மாநிலங்களவை தேர்தலில் எனக்கு வாய்ப்பு வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன். பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்துவது பற்றி சிந்திக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.