டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதங்களைக் கேட்டுக் கொள்கிறேன். – அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்று இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக இருந்த பாஜகவின் உள்ளாட்சி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுகளில் 134 இடங்களில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 9 மற்றும் மற்றவை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்ற பிறகு, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், மாற்றத்தை கொண்டு வந்ததற்கு டெல்லி மக்களுக்கு நன்றி எனவும்,
டெல்லி மகாராட்சியை, ஊழலற்ற உள்ளாட்சியாக மாற்ற வேண்டிய கடமை உள்ளது என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், மேலும், ‘ நான் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து, டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.’ எனவும் குறிப்பிட்டார்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…