தனது வெற்றியை  திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காணிக்கையாக கொடுக்கிறேன் -தயாநிதி மாறன்

மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.திமுக சார்பில் தயாநிதிமாறன் மத்திய சென்னையில் போட்டியிட்டு உள்ளார்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தயாநிதிமாறன், 3 சுற்று வாக்கு எண்ணிக்கையில் 30,000 வாக்குக்கள் வித்தியாசத்தில் திமுக அணி முன்னிலையில் உள்ளது.

மொத்தம்18 சுற்றுகள் உள்ளது.இதே நிலையில் தொடரும் என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக சிறப்பான வெற்றியை பெறும் .மேலும் என்னுடைய வெற்றியை  திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காணிக்கையாக அளிக்கிறேன் என கூறினார்.

author avatar
murugan

Leave a Comment