திக் திக் நிலைமையில் தான் தற்போது இருக்கிறேன் : நடிகர் பிரபாஸ்

நடிகர் பிரபாஸ் தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படம் பல சாதனைகளை புரிந்து, பல கோடிகளை வசூல் செய்தது. நடிகர் பிரபாஸுக்கு பாகுபலி மற்றும் இதன் இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்று தந்தது.

இந்நிலையில், நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சஹோ திரைப்படமானது இந்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து அவர் கூறுகையில், பாகுபலி திரைப்படம் ரிலீஸ் ஆகும் போது இருந்த திக் திக் நிலைமையில் தான் தற்போதும் உள்ளதாக கூறியுள்ளார்.

அதற்கு காரணம்  என்னவென்றால், பாகுபலி படத்தின் கிளைமாக்சில் தான் இறந்து போவதாக காட்டியதை தனது ரசிகர்கள் ஏற்பார்களா? இல்லையா? என்ற பயத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.