சென்னை அணிக்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயித்த ஹைதராபாத்..!

இன்று நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ரன் எடுக்காமல் பேர்ஸ்டோவ் விக்கெட்டை இழந்தார்.

பின்னர், இறங்கிய மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடி 29 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து,  11 ஓவரில் வார்ன்ர் 28 ரன்னில் விக்கெட்டை இழக்க அடுத்த  பந்திலே வில்லியம்சன் ரன் அவுட் ஆனார்.

பின்னர், மத்தியில் இறங்கிய  பிரியாம் கார்க் , அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக விளையாடிய பிரியாம் கார்க் அரைசதம் விளாசி கடைசிவரை களத்தில் நின்றார்.

இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். 165 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.

 

author avatar
murugan