கைதி பட வசூல் இத்தனை மடங்கு அதிகரித்துள்ளதா? பிரபல திரையரங்கு உரிமையாளர் ட்வீட்!

தீபாவளியை முன்னிட்டு தளபதி விஜயின் பிகில் மற்றும் நடிகர் கார்த்தியின் கைதி என இருபடங்களும் ஒரே நாளில் திரையிடப்பட்டது. தளபதி விஜயின் பிகில் படம் ரிலீசானதால், கைதி படத்திற்கு அதிகமான வரவேற்பு இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது.
முதல் நாள் வசூலை காட்டிலும் மற்ற நாட்களில் வசூல் அதிகரித்து உள்ளதாக, சென்னை திரையரங்கு உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை ரோகினி திரையரங்கு உரிமையாளர் ட்விட்டரில் கைதி வசூல் மற்ற நாட்களை விட சுமார் 1.8 மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு நாட்கள் காட்சி அதிகரிக்கப்பட்டது தான் இதற்கு காரணம் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.