உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஏப்.1ம் தேதி பரப்புரை மேற்கொள்ள தமிழகம் வரவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் வருகின்றனர்.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஏப்.1ம் தேதி பரப்புரை மேற்கொள்ள தமிழகம் வரவுள்ளதாக அறிவித்துள்ளார். பாஜக வேட்பாளரை மட்டும் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.