அதிமுக வேட்பாளர் காரில் இருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்த அதிகாரிகள்…!

முசிறி அதிமுக வேட்பாளர் செல்வராசுக்கு சொந்தமான காரில் செல்லப்பட்ட ரூ.1 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் தீவிர வாகான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முசிறி அதிமுக வேட்பாளர் செல்வராசுக்கு சொந்தமான காரில் செல்லப்பட்ட ரூ.1 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கரூர் குளித்தலை அருகே பெட்டவாய்த்தலையில் காரில் சாக்கு மூட்டையில் வைத்து பணத்தை கொண்டு சென்ற போது அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து, பணத்தை சாக்குமூட்டையில் கொண்டு சென்ற, மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன் உட்பட 4 பேரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.