கனமழை எதிரொலி.. நாளை 4 மாவட்டத்திற்கு விடுமுறை.. தேர்வுகள் ஒத்திவைப்பு..!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று காலை முதல் தூத்துக்குடி, நெல்லை தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டிருந்த நிலையில் தற்போது நெல்லை மாவட்டத்திற்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெற இருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மனோன்மணியம்  பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் தகவல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ,நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் எனவும்  மேலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

author avatar
murugan