களைகட்டத் தொடங்கிய ஹோலி(Holi) பண்டிகை!

ஆயிரக்கணக்கான விதவைப் பெண்கள் உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனம் பகுதியில்  தங்கள் வெள்ளையாடையின் மீது வண்ணங்களைப் பூசிக் கொள்ளத் துணிந்தனர்.

வண்ணங்களின் விழாவான ஹோலிப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடிய அவர்கள் சுற்றுலாப் பயணிகளுடன் சேர்ந்து தங்கள் வெள்ளைப் புடைவைகளை வண்ணமயமாக்கினர்.

ஆடல் பாடல் கொண்டாட்டம் என்று வடமாநிலங்களில் ஹோலிப் பண்டிகை களைகட்டத் தொடங்கி விட்டது. நாடு முழுவதும் நாளைய தினம் ஹோலி கொண்டாடப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment