இந்து மத விழாக்கள் என்றால் எல்லோரும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது..!

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இந்துமத விழாக்களுக்கு தடைகளும் முட்டுக்கட்டைகளும் வந்து கொண்டிருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இந்துமத விழாக்களுக்கு தடைகளும் முட்டுக்கட்டைகளும் வந்து கொண்டிருக்கிறது.இவை தடுக்கப்பட வேண்டும்.இந்து மத விழாக்கள் என்றால் எல்லோரும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. புஷ்கர விழாவில் அனைத்து படித்துறைகளிலும் பாதுகாப்பை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment