பிரதமர் பேரணிக்கு அனுமதி வழங்கி ஐகோர்ட் உத்தரவு!

High Court :கோவையில் வரும் 18ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் (ரோடு ஷோ) பேரணிக்கு மாநகர காவல்துறை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது. இதற்கு எதிராக கோவை மாவட்ட பாஜக சார்பில் சென்னை உயநீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்ற நிலையில், பேரணிக்கு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பினார்.

Read More – பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி மறுப்பு… இன்று மாலை உத்தரவு பிறப்பிக்கும் ஐகோர்ட்!

அப்போது காவல்துறை தரப்பில் கூறியதாவது, தேர்வு நாள் என்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்கவில்லை. அதுமட்டுமில்லாமல், பிரதமருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தாலும் அனுமதி மறுத்திருப்பதாக விளக்கமளித்தது. இதையடுத்து, இந்த மனு மீதான உத்தரவு இன்று மாலை பிறப்பிக்கப்படும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்திருந்தார்.

Read More – #Election2024: மதுரையில் மீண்டும் எம்பி சு.வெங்கடேசன் போட்டி!

இந்த நிலையில், கோவையில் வரும் 18ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாஜகவின் ‘ரோடு ஷோவுக்கு’ அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். அதாவது, கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வாகன பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More – தமிழ் பண்பாட்டின் முதல் எதிரி.. திமுக ஒரு அரக்கன்.! பிரதமர் மோடி ஆவேசம்.!

பேரணி செல்லும் வழி, தொலைவு மற்றும் நேரம் ஆகியவற்றை கோவை காவல்துறையினரே முடிவு செய்யலாம் என்றும் பேரணி செல்லும் பகுதிகள், சாலைகளில் பதாகைகள் வைக்க அனுமதி இல்லை எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிபந்தனை விதித்துள்ளார். வரும் 18ம் தேதி பிரதமர் மோடியின் வருகையின்போது கோவையில் 4 கிமீ தூரத்துக்கு ரோடு ஷோ நடத்த காவல்துறையிடம் பாஜக அனுமதி கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment