கனமழை : வீட்டு சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி…!

ஈரோட்டில் தொடர் கனமழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட மரப்பாலம் வீதியில் அங்கம்மாள் என்னும் மூதாட்டி தனது மகன் ராமசாமியுடன் வசித்து வருகிறார். நேற்று மாலை முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக மூதாட்டி வசித்து வந்த ஓட்டு வீடு பலவீனமடைந்துள்ளது.

இந்நிலையில், தூங்கிக்கொண்டிருந்த அங்கம்மாள் மற்றும் ராமசாமி மீது விழுந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திலேயே மூதாட்டி அங்கம்மாள் உயிரிழந்த நிலையில், அவரது மகன் ராமசாமி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Rebekal