#IPL2022: பெங்களூர் அணிக்கு கடைசி வாய்ப்பு.. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த குஜராத்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 67-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பெங்களூர் அணிக்கு பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற இதுவே கடைசி போட்டி என்பதை கருத்தில் கொண்டு சிறப்பாக ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாடும் வீட்டாட்கள்:

குஜராத் டைட்டன்ஸ்:

விருத்திமன் சாஹா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தேவாதியா, ரஷித் கான், சாய் கிஷோர், லாக்கி பெர்குசன், யாஷ் தயாள், முகமது ஷமி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

விராட் கோலி, ஃபாப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், சித்தார்த் கவுல், ஜோஷ் ஹேசில்வுட்.

Leave a Comment