1,47,686 கோடி வரி வசூல்.! நடப்பாண்டில் 7வது முறையாக ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பு.!

கடந்த வருத்தத்தோடு ஒப்பிடுகையில், சென்ற மாதம் ஜிஎஸ்டி வசூல் இந்தியாவில் 26 சதவீதமும், தமிழக அளவில் 10 சதவீதமும் உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.  

செப்டம்பர் மாத வரையிலான கடந்த மாத ஜிஎஸ்டி வரி வசூல் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நடப்பு ஆண்டில் 7வது முறையாக ஒரு மாத கால ஜிஎஸ்டி வரி உயர்ந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ஜிஎஸ்டி வரி 1,47,686 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 26 விழுக்காடு அதிகமாகும்.

அதே போல, கடந்த மாத ஜிஎஸ்டி வசூல் தமிழகத்தி 8,637  கோடி உயர்ந்துள்ளது. இது கடந்த வருத்தத்தோடு ஒப்பிடுகையில், 10 விழுக்காடு அதிகமாகும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment