8 வயது உறவுக்கார பெண்ணை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனுக்கு தண்டனை வழங்கிய கிராம பஞ்சாயத்து!

தனது உறவுக்கார சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனுக்கு ஒரு லட்சம் அபராதமும் நான்கு முறை அறையும் கொடுத்து கிராம பஞ்சாயத்து சார்பில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தனது உறவுக்கார சிறுமி ஆகிய எட்டு வயது பெண்ணை 16 வயது சிறுவன் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தனது வீட்டுக்கு அருகிலுள்ள காட்டில்  வைத்து சிறுவன் பலாத்காரம் செய்ததாகவும், சிறுமியின் அழுகை சத்தினை கேட்டு அவ்வழியே வந்தவர்கள் தான் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினருக்கு புகார் அளிக்காத கிராம பஞ்சாயத்து நிர்வாகம், சிறுவனை அழைத்து 4 முறை அறைந்துள்ளதுடன் ஒரு லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

மேலும் சிறுவனது குடும்பமோ அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பமோ இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கவில்லையாம். உள்ளூர் பஞ்சாயத்து மூலமாகவே இந்த வழக்கு தீர்க்கப்பட்டுள்ளது எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறாராம்.

author avatar
Rebekal