#Breaking:”இவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி;தலா ரூ.25 லட்சம் நிதியுதவி” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டம்,புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில்,அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கார் விபத்து குறித்து விசாரிப்பதற்காக,இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சந்திரசேகர்,பழனி மற்றும் காவலர்கள் தேவராஜன்,மணிகண்டன் ஆகியோரும் சம்பவ இடத்திற்குச் சென்று மேற்படி கார் விபத்தில் சிக்கிக் தவித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு விசாரணை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு அதிகாலை சுமார் 2-10 மணி அளவில் அதிவேகமாக வந்த டிராவல்ஸ் வேன் ஒன்று அவர்கள்மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் காவலர் தேவராஜன் ஆகியோர் உயிரிழந்தனர்.இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு காவலர் மணிகண்டன் மற்றும் டிராவல்ஸ் வேனில் பயணம் செய்த 3 பேர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில்,புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த இரண்டு காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆழ்ந்த இரங்கல் மற்றும் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.மேலும்,அவர்களது குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கிடவும் முதல்வர்  உத்தரவிட்டுள்ளார்.அதைப்போல,இவ்விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோருக்கு,உயர்தர சிகிச்சை வழங்கிடவும் முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

 

Leave a Comment