ரூ.39 ஆயிரத்தை தாண்டியது தங்கம்…அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.39,056-க்கு விற்பனை.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.39,056க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து, ரூ.4,882க்கு விற்பனையாகிறது. 24 கேரட் ஆபரணதங்கத்தின் விலை, 8 கிராம் ரூ.4,2248-க்கு விற்பனையாகிறது.

இதுபோன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு உயர்ந்து, ரூ.71.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.71,300-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில், இன்று ஆபரணதங்கத்தின் விலை சவரன் ரூ.39 ஆயிரத்தை தாண்டியிருப்பது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்