முதல்வர் குறித்து அவதூறு பேசிய பாஜக நிர்வாகி கைது..!

முதல்வர் முக ஸ்டாலினை அவதூறாக பேசிய பாஜக பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரச்சார அணித் தலைவர் தான் ஜெயபிரகாஷ். இவர் முதல்வர் முக ஸ்டாலின் அவதூறாக பேசியதாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இதனை அடுத்து இரணியலில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் ஜெயபிரகாஷை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

author avatar
Rebekal