எங்களுக்கு சூடான பிரியாணி கொடுங்க…. பசி கொடுமையால் தொண்டர்கள் ஆக்ரோஷமான கோஷம்…..

  • செங்கல் பட்டு, ராதா மஹாலில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
  • அதிமுக வேட்பாளர் வரவில்லை என்றால் பரவாயில்லை, எங்களுக்கு சூடான பிரியாணி கொடுங்கள்.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக மும்முரமாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சிகளின் பொது கூட்டங்களிலும், தேர்தல் பிரச்சாரத்தில் மற்ற கட்சிகளை குற்றம் சாட்டியும், விமர்சித்தும் வருகின்றனர். தாக்கப்படுகின்ற மற்ற காட்சிகள் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், செங்கல் பட்டு, ராதா மஹாலில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிமுக வேட்பாளர் வர தாமதமானதால் மக்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, அக்கூட்டத்திற்கு கூடி வந்த தொண்டர்கள், அதிமுக வேட்பாளர் வரவில்லை என்றால் பரவாயில்லை, எங்களுக்கு சூடான பிரியாணி கொடுங்கள் என பசி கொடுமையால் தொண்டர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment