ஆண்களே உஷார் !முகநூல் வழியாக ஆண்களுடன் பழகி பல கோடி ஏமாற்றிய இளம்பெண்…..

 
கோவையில் மேட்ரிமோனியல் இனையதளம் மூலம் பல ஆண்களை ஏமாற்றியதாக இளம்பெண், பெண்ணின் தாயார் உட்பட 3 பேரை கைது செய்து கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பாலமுருகன் (27). இவருக்கு சுருதி என்ற பெண்ணுடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. 3 மாதம் பழகியவுடன் பாலமுருகனிடம் திருமணம் செய்துக்கொள்வதாக சுருதி கூறியுள்ளார். இந்நிலையில், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி தவணை முறையில் ரூ.45 லட்சம் பெற்றுள்ளார். பாலமுருகனும் வருங்கால மனைவி என நம்பி பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற சுருதி சிறிது நாட்களில் காணாமல் போனார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலமுருகன், மோசடி குறித்து கோவை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பாலமுருகனின் புகாரை ஏற்ற சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து பி.என்.பாளையத்தை சேர்ந்த சுருதி (21), தாய் சித்ரா (45), சகோதரர் பிரசன்ன (38) வெங்கடேசன் ஆகிய மூவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் இளம்பெண் ஸ்ருதி முகநூல், மேட்ரிமோனி மூலம் ஆண்களை ஏமாற்றி பல கோடி மோசடி செய்து பணம் பரித்தது தெரியவந்துள்ளது.
source: dinasuvadu.com

Leave a Comment