நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லை பெரியாறு அணைக்கு ஒன்றும் ஆகாது! – மத்திய அமைச்சர் பதில்!

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது கேரள மாநிலம் இடுக்கி நாடாளுமன்ற பகுதியின் காங்கிரஸ் எம்.பி டி.என்.குரியகோஸ் மக்களவையில் கேள்வி எழுப்பினார். அவர் கூறும்போது, ‘முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றியும், அந்த அணைக்கு பாதிப்பு ஏற்பட்டால் கேரள மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர்.’ எனவும் தனது கருத்தை முன்வைத்தார்.
இதற்க்கு பதிலளித்த, மத்திய ஜல்சக்தித்துறை கஜேந்திர்சிங்ஷெகாவத், பதிலளிக்கையில், ‘ முல்லை பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லை பெரியாறு அணைக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும்.’ அவர் பதில் கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.