மே 01,02ம் தேதிகளில் முழு ஊரடங்கா? – அரசே முடிவெடுக்கும் – தேர்தல் அதிகாரி!!

முழு ஊரடங்கு தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 01, 02-ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தொடர்பான விபரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளோம் என்றும் தேர்தல் வழிமுறைகளை பின்பற்றி மே 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வரும் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்