ரூ.21,074.43 கோடி மதிப்பில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன- மத்திய அமைச்சர்..!

2019 முதல் 2022 பிப்ரவரி வரை  ரூ.21,074.43 கோடி மதிப்பிலான 128 வழக்கு நிலுவையில் உள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் வங்கி மோசடிகள் தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மொத்தம்  ரூ.21,074.43 கோடி மதிப்பிலான 128 வங்கி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அதில், மேற்கு வங்கத்தில் ரூ.293.64 கோடி மதிப்பிலான 6 வழக்குகளும், சத்தீஸ்கரில் 157.26 கோடி மதிப்பிலான 8 வழக்குகளும், ராஜஸ்தானில் ரூ.12.06 மதிப்பிலான 1 வழக்கும், மகாராஷ்டிராவில் ரூ.20,312.35 மதிப்பிலான 101 வழக்குகளும், பஞ்சாபில் ரூ.298.94 கோடி மதிப்பிலான 12 வழக்குகள் என மொத்தம்  ரூ.21,074.43 கோடி மதிப்பிலான 128 வங்கி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

 

author avatar
murugan