ரூ.21,074.43 கோடி மதிப்பில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன- மத்திய அமைச்சர்..!

2019 முதல் 2022 பிப்ரவரி வரை  ரூ.21,074.43 கோடி மதிப்பிலான 128 வழக்கு நிலுவையில் உள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மாநிலங்களவையில் வங்கி மோசடிகள் தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மொத்தம்  ரூ.21,074.43 கோடி மதிப்பிலான 128 வங்கி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில், மேற்கு வங்கத்தில் ரூ.293.64 கோடி மதிப்பிலான 6 … Read more

இந்தியாவில் 70 பேர் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் – மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர்!

இந்தியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸால் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதன்முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் பரவி வருவதுடன், இந்தியாவிலும் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மக்களவையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்களிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு … Read more

தற்காலிக ஓய்வூதியம் 1 ஆண்டு காலம் வரை நீட்டிப்பு..!

தற்காலிக ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அளவை ஓய்வு பெற்ற நாளிலிருந்து ஒரு வருடம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒய்வூதிய துறை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் உடனான கூட்டத்தில் காணொளி மூலம்  பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு தற்காலிக ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அளவை ஓய்வு பெற்ற நாளிலிருந்து ஒரு வருடம் வரை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நேற்று தெரிவித்தார். மேலும், … Read more

#2வது ராக்கெட்ஏவுதளம்-குலசேகரன்பட்டினம்!பணிகள் விறுவிறு..ஜிதேந்திரசிங் தகவல்

இரண்டாவது பிரம்மாண்ட ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியானது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளி அமைச்சர்  மக்களவையில் ஜிதேந்திரசிங் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்களவையில்  கூறியதாவது: இந்தியாவின் இரண்டாவது பிரம்மாண்ட ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியானது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மத்திய  அணுசக்தி மற்றும் விண்வெளி அமைச்சர்  மக்களவையில் ஜிதேந்திரசிங் எழுத்துப்பூர்வ பதிலளித்தார். விண்வெளித் துறையின் வேண்டுகோளின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 962  ஹெக்டேர் … Read more

UPSC முதன்மை தேர்வுகள் ஒத்திவைப்பு.! ஜிதேந்தர் சிங் அதிரடி.!

UPSC முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் மே 03 -ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதுவரை, இந்தியாவில் 29,435 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 6,869 பேர் குணமடைந்து உள்ளனர். இந்நிலையில்,  ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் கூடம் இடங்கள் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் பல பள்ளிகளில் 9 -ம் வகுப்புகள் … Read more

56 அரசியல்வாதிகள் மீது சிபிஐ வழக்கு..!

நாடாளுமன்ற இரு அவைகளிலும் குளிர்க்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக இன்றும் கூட்டத்தொடர் நடைபெற்றது. இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வ பதிலளித்தார். கடந்த 3 வருடங்களில் அரசியல்வாதிகள் மீது 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில்  26 வழக்குகள் விசாரணையில் ஏற்பதாகவும் , 11வழக்குகள் தொடக்க கட்ட விசாரணையில் இருப்பதாகவும் , 11 … Read more

கூடங்குளம் அணுக்கழிவுகள் எங்கே என்ன செய்யப்படுகிறது?! மத்திய அமைச்சர் மக்களவையில் விளக்கம்!

நாடாளுமன்ற கூட்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது, இந்த கூட்டத்தொடரில் திமுக எம்.பி ஞானதிரவியம், கூடன்குளம் அணுக்கழிவுகள் எங்கே கொட்டப்படுகின்றன. அதனை என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பினர். ஏனென்றால் அதனால் மக்கள் உடல் நலனுக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்ற வகையில் கேள்வி கேட்டிருந்தார். அதற்க்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளிக்கையில், ‘ கூடங்குளம் அணுஉலையில் சேகரிக்கப்படும் அணுக்கழிவுகள் பத்திரமான இடத்தில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அது எந்த இடம் என சில பாதுகாப்பு கரங்களுக்காக கூற … Read more