அதிமுக போராட்டத்தின் போது மயங்கி விழுந்த முன்னாள் அமைச்சர் ..!

ஜெயக்குமார் கைதைக் கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது, முன்னாள் அமைச்சர் செம்மலை திடீரென மயங்கி விழுந்தார்.

தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது  கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகரை தாக்கி அரைநிர்வாணமாக அழைத்து சென்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து,  ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை மயங்கி விழுந்தார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், கட்சி நிர்வாகிகள் அவரை தண்ணீர் தெளித்து  எழுப்பினர்.

author avatar
murugan