முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து..!

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டி20 , ஒருநாள்  மற்றும்  டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி இன்று டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்க இருந்தது.

ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து மழை பெய்ததால் தென்னாப்பிரிக்கா – இந்தியா மோத இருந்த முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

author avatar
murugan