தீபத்திருவிழா – திருவண்ணாமலையில் 19 அன்று உள்ளூர் விடுமுறை!

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 19-ஆம் தேதி ஒருநாள் உள்ளூர் விடுமுறை.

திண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழாவைஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் 19ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வரும் திங்கள் அன்று திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் 4-ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக இயங்கும் என மாவட்ட ஆட்சியர் முகேஷ் அறிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்