ஹரியானா : பிரபல இந்தி எழுத்தாளர் மானு பண்டாரி காலமானார்!

ஹரியானாவின் பிரபல இந்தி எழுத்தாளர் மானு பண்டாரி உடல்நல குறைவால் இன்று காலமானார்.

1931ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பான்பூரில் பிறந்தவர் தான் மானு பண்டாரி. இவரது தந்தை ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியாக இருந்துள்ளார். பண்டாரி சிறந்த இந்திய எழுத்தாளரும், ஆசிரியருமான ராஜேந்திரன் யாதவ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஹரியான மாநிலத்தின் சிறந்த எழுத்தாளரான மானு பண்டாரி கடந்த சில காலங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் ஹரியான மாநிலத்தில் குருகிராம் பகுதியில் நாராயணா  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். அவரது இறுதி சடங்கு நாளை டெல்லியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal