#INDvAUS:இந்திய அணி முதலில் பேட்டிங்!!அறிமுக வீரர் மயங்க் மார்கண்டேவுக்கு வாய்ப்பு!!

  • ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது  டி20 போட்டி இன்று  நடைபெறுகிறது. 
  • இந்த போட்டியில் டாஸ் வென்ற  ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். 

இந்தியாவில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது  டி20 போட்டி இன்று  நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ்ச் பந்துவீச்சை  தேர்வு செய்தார்.

மேலும் இந்த போட்டியில் இளம் வீரர் மயங்க் மார்கண்டே அறிமுகமாகியுள்ளார்.

  இந்திய அணி :-

 

 

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல்,  ரிஷப் பந்த்,  தினேஷ் கார்த்திக்,  எம்எஸ் டோனி (விக்கெட் கீப்பர்), குருணால் பாண்டியா,    சாஹல்,  பும்ரா,  உமேஷ் யாதவ், மயாங்க் மார்கண்டே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 

இந்த போட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள விஷாக்கப்பட்டினத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.இரவு 7 மணிக்கு தொடங்கும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பு செய்கிறது.

Leave a Comment