விவசாயிகளுக்கு 6000 ரூபாய்…தமிழகத்தில் தொடங்கி வைத்தார்  முதலமைச்சர் பழனிசாமி!!

  • மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் 3 தவணையாக வழங்கப்படுமென்று தெரிவித்தார்.
  • இந்த திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பிப்ரவரி 1_ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் மத்திய வேளாண்துறை அமைச்சகம் தொடர் முயற்சிகளை எடுத்து வந்தது.இந்நிலையில் இன்று வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் , விவசாயிகளுக்கு குறைத்தபட்ச வருமான திட்டத்தின் படி அனைத்து மாநில அரசுகளும்  2 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பெயர்களை ஆண்டுக்கு 6000 ரூபாய் பெறும்  குறைந்த பட்ச வருவாய் திட்டத்தில் இணைக்கலாம் என்று தெரிவித்தது . மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த http://pmkisan.nic.in  என்ற இணைத்தை மத்திய வேளாண்துறை அமைச்சகம் தொடங்கியது.

இதையடுத்து இத்திட்டத்திற்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் என்று பெயரிடப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தில் பலனடையும் விவசாயிகளின் பெயர் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது .இதையடுத்து இந்த திட்டத்தின் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் இத்திட்டத்தை இன்று மதியம்   பிரதமர் மோடி உத்திர பிரதேச மாநிலத்தில் தொடங்கி வைத்தார்.

அதே போல மாநிலங்களின் பல்வேறு பகுதியில் இந்த திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.இந்நிலையில் சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற  விழாவில்  முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து  கொண்டனர்.இந்த தொகை தலா 2 ஆயிரம் வீதம் 3 தவணையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment