போராட்டம் தொடர்பாக பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது – தொல்.திருமாவளவன்,

  • திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக போராட்டம்  நடத்தப்பட போராட்டம் தொடர்பாக     ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  
  • போராட்டம் தொடர்பாக பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணைக்குப் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆஜராகினர்.இதன் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழக மக்களுக்காகவும்,

விவசாயிகளுக்காகவும் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை எதிர்கொண்டு முறியடிப்பேன். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன், அந்த வழக்கையும் எதிர்கொள்வேன் என்று கூறினார்.  நாட்டின் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளவேண்டும்  என்றும் தெரிவித்துள்ளார்.