130 கோடி மக்கள் வீட்டிலிருந்தாலும் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் .! பிரதமர் மோடி .!

பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் கொரோனா வைரஸ்  தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இன்று  கொரோனா தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றினர்.

அப்போது பேசிய மோடி , அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி  எனவும்  நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி என கூறினார்.

இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி உள்ளது.வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். 130 கோடி மக்கள் வீட்டிலிருந்தாலும் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம்.

மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் என்றார் பிரதமர் மோடி.மேலும் ஏப்ரல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் மின்விளக்கை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும்  என கூறினார்.

கடந்த 23-ம் தேதி இரவு 8 மணிக்கு மோடி காணொலி மூலம் மக்களிடம் உரையாற்றினர்.அப்போது தான் 21 நாள் ஊரடங்கை அறிவித்தார்.மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு  கைதட்டி  நன்றி தெரிவிக்கவேண்டும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

author avatar
murugan