ஓபிஎஸ் அணி செத்த பாம்பு.! வாழ்நாள் முழுக்க தர்மயுத்தம் தான்… இபிஎஸ் கடும் விமர்சனம்.!

ஓபிஎஸ் அணி செத்த பாம்பு எனவும் வாழ்நாள் முழுக்க தர்மயுத்தம் தான் செய்ய வேண்டும் என இபிஎஸ் கடும் விமர்சனம் செய்துள்ளார். 

நேற்று அதிமுக சார்பில் வெவ்வேறு கட்சியில் இருந்து அதிமுக கட்சியில் இணையும் நிகழ்வு மற்றும் பொதுக்கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சனம்செய்தார்.

ஓ.பன்னீர்செல்வம் பற்றி எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு பேசுகையில், ‘ அதிமுக ஆட்சி களைய வேண்டும் என அதிமுகவுக்கு எதிராக சட்டப்பேரவையில் வாக்களித்தார். இருந்தும் அவரை மீண்டும் எங்களுடன் சேர்த்து துணை முதல்வர், கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தோம். ஆனால் இப்போது தொடர்ந்து தர்ம யுத்தம் தர்ம யுத்தம் என நடத்தி கொண்டு இருக்கிறார். இன்னும் எத்தனை தர்ம யுத்தம் என கடுமையாக விமர்சித்து,

ஓபிஎஸ் அணி ஒரு செத்த பாம்பை போன்றது. அவர்கள் வாழ்நாள் முழுக்க தர்ம யுத்தம் நடத்தி கொண்டு இருக்க வேண்டியது தான் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அதிமு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.