4 விக்கெட்கள் இழந்தும் ரன்களை வேட்டையாடும் இங்கிலாந்து அணி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி தனது அதிரடியான ஆட்டத்தால்  48.2 ஓவர்கள் முடிவில் 329 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. இதில் அரைசதத்தை கடந்தவர்களாக ரிஷாப் பந்த்  78, ஹர்திக் பாண்டியா 64 ,தவான் 67 ரன்களை எடுத்தனர்.

அதன் பின்பு  330 ரன் என்ற வெற்றி இலக்கை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே ஜேசன் ராய் விக்கெட்டையும் மூன்றாவது ஓவரில் ஜானி பேர்ஸ்டோ விக்கெட்டையும் இழந்தது தற்போது வரை இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 22 ஓவர்கள் முடிவில் 149 ரன்களை எடுத்துள்ளது.

 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாம் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

149-4 (22.3 Ov)

author avatar
Dinasuvadu desk