சட்டப்படியே அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்

சட்டப்படியே அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டதே இந்த மறைமுகத் தேர்தல் முறை மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே. சட்டத்திற்கு புறம்பானது அல்ல மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல.
எம்.எல்.ஏக்கள் தான் முதல்வரை தேர்ந்தெடுக்கின்றனர், எம்.பி.க்கள் தான் பிரதமரை தேர்ந்தெடுக்கின்றனர்.அதுபோலவே தற்போது கவுன்சிலர்கள் மேயரை தேர்ந்தெடுப்பார்கள் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.