#ElectionBreaking: மார்ச் 4ம் தேதி அதிமுக வேட்பாளர் நேர்காணல்.!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை மறுநாள் நேர்காணலை நடத்துகிறது அதிமுக.

அதிமுக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை மறுநாள் நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. மார்ச் 4ம் தேதி காலை 9 மணி முதல் மாவட்ட வாரியாக நேர்காணல் நடத்தப்படும் என முதல்வர் மற்றும் துணை முதல்வர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகாத நிலையில், விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை மறுநாள் நேர்காணல் நடையப்பரும் என தெரிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என கூறியுள்ளனர்

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்