தமிழகத்தில் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை தொடர்பாக ஆராய 12 பேர் கொண்ட குழு அமைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இ.ஐ.ஏ (Environmental impact assessment) விவகாரம் தொடர்பாக ஆராய 12 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்ட இ.ஐ.ஏ அறிக்கை தொடர்பான சாதக, பாதகங்களை 12 பேர் குழு ஆராய்ந்து வெளியிடும் என்று கூறப்படுகிறது.