#BREAKING : வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் வேட்புமனுவை வாபஸ் பெற்றார்  திமுகவின் என்.ஆர் இளங்கோ

மாநிலங்களவை தேர்தலுக்காக  தாக்கல் செய்த  வேட்புமனுவை வாபஸ் பெற்றார்  திமுகவின் என்.ஆர் இளங்கோ

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் மற்றும் திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில்  மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.மூவரும் வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டனர்.

வைகோ மீது தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ 10,000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் வைகோவின்  வேட்புமனு ஏற்க்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்து வந்தது.இதனால் திமுக சார்பில் 3 ஆவது வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார், என்.ஆர்.இளங்கோ.ஆனால் வேட்புமனு மீதான பரிசீலனையில் வைகோவின்  வேட்புமனு ஏற்கப்பட்டது.

இந்நிலையில்  மாநிலங்களவை தேர்தலுக்காக  தாக்கல் செய்த  வேட்புமனுவை வாபஸ் பெற்றார்  திமுகவின் என்.ஆர் இளங்கோ. மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் தனது மனுவை திரும்ப பெற்றார் திமுகவின் என்.ஆர்.இளங்கோ