விளைநிலங்களை பறிக்க கூடிய எதையும் திமுக ஏற்று கொள்ளாது-கனிமொழி

சென்னையில்  திமுக எம் .பி.கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  தமிழ் வளர்ச்சிக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு  தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.மேலும்  எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

திட்டங்களை செயல்படுத்த என்ன பெயர் மாற்றினாலும், மக்களுடைய விளைநிலங்களை பறிக்க கூடிய எதையும் திமுக ஏற்று கொள்ளாது என்று தெரிவித்தார்.