சட்டமன்ற கூட்டத்தில் இருந்து திமுக வெளிநடப்பு

 சட்டமன்ற கூட்டத்தில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு செய்துள்ளது.

இன்று மூன்றாவது நாளாக தமிழக சட்டப்பேரவைத் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய கல்வி கொள்கை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.பின்னர் அவர் பேசுகையில், குலக்கல்வி திட்டத்தின் மறு உருவம் புதிய கல்விக் கொள்கை ஆகும். புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் .புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்று  பேசினார்.

இதனையடுத்து  புதிய கல்வி கொள்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து சட்டமன்ற கூட்டத்தில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு செய்துள்ளது.