திமுகவினர் சுபஸ்ரீ மரணத்திற்கு அறிக்கை விட்ட பிறகும் பேனர் வைத்துள்ளனர்-அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவினர் சுபஸ்ரீ மரணத்திற்கு அறிக்கை விட்ட பிறகும் திருவண்ணாமலையில் பேனர் வைத்துள்ளனர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், விளம்பரத்திற்கு வேண்டுமானால் ஸ்டாலின் செயல், அறிக்கை, அவர் பேச்சு இருக்கலாம். ஆனால் நடைமுறைக்கு ஏற்காத ஒன்று. சுபஸ்ரீ மரணத்திற்கு அறிக்கை விட்ட பிறகும் திருவண்ணாமலையில் பேனர் வைத்துள்ளனர்.

தமிழ் எங்கும் எதிலும் ஒளித்திட வேண்டும் என கொடி பிடித்தது அண்ணாவின் அரசு விரும்பாத மொழி என்றும் திணிக்கப்படக்கூடாது.தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.