டெல்லியில் திமுக புதிய அலுவலகம் – இன்று திறந்து வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

டெல்லி:மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில்,பிரம்மாண்டமாக திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும்,முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்கள்,3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

தலைவர்களுக்கு அழைப்பு:

இதனையடுத்து,பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து திமுக அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

திமுக அலுவலகம் இன்று திறப்பு:

இந்நிலையில்,டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது.இன்று மாலை 5 மணியளவில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்,திமுக அலுவலகத்தை(அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை) திறந்து வைக்கிறார்.அதன்பின்னர் அண்ணா, கலைஞர் ஆகியோரது சிலைகளையும்,பேராசிரியர் அன்பழகன் பெயரிலான நூலகத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இந்த விழாவில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,திமுக பொருளாளர் டி.ஆர். பாலு மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.