டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என் நேரு உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றது அண்மையில் அம்பலமானது.உத்து தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 2006-2011 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இதில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என் நேரு, அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் அந்த சமயத்தில் சிக்கியது.இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.வழக்கு விசாரணைக்கு வரும்போது தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.