அவரை பார்த்தாலே பதட்டம் தான்! அந்த இயக்குனரை பார்த்து நடுங்கும் கெளதம் மேனன்!

Gautham Menon இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் மின்னலே திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடி என பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். இவருடைய படங்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்று கூட சொல்லலாம்.

READ MORE – நாடோடிகள் படத்திற்கு விழுந்த அடி! இன்னும் கடன் கட்டும் சமுத்திரக்கனி!

இப்படி பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் கெளதம் மேனன் எந்தவி விஷயமாக இருந்தாலும் பயம் இல்லாமல் தயக்கம் இல்லாமல் வெளிப்படையாகவே பேசிவிடுவார். அப்படி பட்ட கெளதம் மேனனனுக்கே இயக்குனர் மணிரத்தனத்தை பார்த்தாலே பயம் வந்துவிடுமாம். இதனை அவரே சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

READ MORE – நாடோடிகள் படத்திற்கு விழுந்த அடி! இன்னும் கடன் கட்டும் சமுத்திரக்கனி!

இது குறித்து பேசிய இயக்குனர் கெளதம் மேனன் ” இன்றுவரை மணிரத்தனத்தை பார்த்து பேசுனாலே என்னுடைய கைகள் கால் எல்லாம் தானாகவே உதறும். அந்த அளவிற்கு எனக்கு பயம் பதட்டம். நான் சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு நாயகன் படத்தை பார்த்து தான் சினிமாவுக்கு வந்தேன். படத்தில் வரும் இசை படத்தின் திரைக்கதை படத்தில் நடித்த நடிகர்கள் இதையெல்லாம் பார்க்கும்போது தான் எனக்கு படத்தை இயக்கவே ஆசை வந்தது.

read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்!

நாயகன் படத்தின் தாக்கத்தை என்னால் மறக்கவே முடியாது. நான் அவருடன் உதவி இயக்குனராக பணிபுரிய ஆசைப்பட்டேன். அதற்கான முயற்சியையும் எடுத்து இருக்கிறேன். ஆனால், அது நடக்கவில்லை. இருப்பினும் இப்போது அவருடன் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்து  இருக்கிறது” எனவும் இயக்குனர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment