#BREAKING : போதிய பெரும்பான்மை இல்லை -ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிசு அறிவிப்பு

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட நிலையில், பெரும்பான்மை இல்லாததால் தேவேந்திர பட்னாவிசு ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த அஜித் பவார் ஆளுநர் கோஷ்யாரி  முன்பதவியேற்றனர்.
இதனால் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரியும்,நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியும்  சிவசேனா -காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு  மீதான நடைபெற்ற விசாரணையில் நாளை தேவேந்திர பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.அதாவது நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இவரை தொடர்ந்து தேவேந்திர பட்னாவிசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர்  கூறுகையில், போதிய பெரும்பான்மை இல்லாததால்  முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.மேலும்  பாஜக-சிவசேனா கூட்டணிக்கே மகாராஷ்டிர மக்கள் வாக்களித்தனர். தேர்தல் முடிவுகளில் மக்களின் முழு ஆதரவும் எங்களுக்கு கிடைத்தது.இடங்களின் எண்ணிக்கையை பார்த்த பிறகு பேரம் பேசத்தொடங்கியது சிவசேனா .சுழற்சி முறையில் முதல்வர் என எந்த வாக்குறுதியும் சிவசேனாவிற்கு அளிக்கப்படவில்லை.மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் அளவு பாஜகவுக்கு இடங்கள் இல்லை என தெரிந்த பின் சிவசேனா முதல்வர் பதவி கேட்டது என்று விளக்கம் அளித்தார்.